தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் பிரதீபா சுக்லா ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மக்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் பிரதீபா சுக்லா ஐடியா கொடுத்துள்ளார். தக்காளிக்கு மாற்றாக எலுமிச்சையை பயன்படுத்தலாம் என்றும், தக்காளி தான் பயன்படுத்த வெண்டும் என்றால் மக்கள் தக்காளி செடிகளை நடவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.